4.9.11

ஆசிரியர் தினம்


ஒரு நாட்டின் தூண்களை உருவாக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள். நல்ல மனிதர்களை நாட்டுக்குத் தருபவர்கள். ஒருவரும் ஆசிரியர்களை நினைவு கூர்வதில்லை. எனவே மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் படி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

அகரமுதல எழுத்தறிவித்து
ஆசை தீர அரவணைத்து
இனிய தமிழ் பயிற்றுவித்து
ஈன்ற தாய் போன்று
உலக மொழி ஆங்கிலம்
ஊருக்கு சொல்லிட
எண் கணிதம் கற்பித்த
ஏற்புடைய ஆசிரியர்கள்
ஐம்புலனூடே அறிவியலும்
ஒழுக்கமும் கற்பித்து
ஓர் குலம் நாமென்றுரைத்து சமூகமும்
ஔவை போல அறிவுரை அளித்தும்
எஃகு போன்று உடற்கல்வி அளித்தும்
எங்களை சிற்பமாய் செதுக்கிய (செதுக்கும்)
ஆசிரியர்களை எக்கணமும் வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment