31.1.13

முக்கியக் கூற்றுகள்: இயற்பியல் 10 -ம் வகுப்பு Part 1


  1. கடத்திகளில் சுதந்திர எலக்ட்ரான்களின் இயக்கம் மூலம் மின்னோட்டம் தோன்றுகிறது.
  2. மின்பகுபொருள்களில் சுதந்திர அயனிகளின் இயக்கம் மூலம் மின்னோட்டம் தோன்றுகிறது.
  3. ஒரு கடத்தியின் மேற்பரப்பில் மின்முலாம் பூசுவதன் மூலம் வேறொரு உலோகத்தைப் பூசும் செயல் மின்முலாம் பூசுதல்.
  4. மின்முலாம் பூசுவதினால் உலோகத்தின் அழகு அதிகரிக்கும், உலோக அரித்தலிலிருந்து பாதுகாக்கப்படும்.
  5. டின்னும் லெட்டும் சேர்ந்த உலோகக்கலவையே மின் உருகு இழை.
  6. மிக உயர்ந்த மின்தடை எண் கொண்ட உலோகம் டங்ஸ்டன்.
  7. பரிமாற்று மின்தூண்டல் தத்துவம் பயன்படுத்தியிருக்கும் கருவி மின்மாற்றி ஆகும்.
  8. AC voltage – ஜை அதிகரிக்கவும் குறைக்கவும் பயன்படுத்தும் கருவியே மின்மாற்றி.
  9. AC voltage – ஜை அதிகரிக்க பயன்படுத்தும் கருவியே உயர் அழுத்த மின்மாற்றி.
  10. AC voltage – ஜை குறைக்க பயன்படுத்தும் கருவியே தாழ்வழுத்த மின்மாற்றி.
  11. AC மின்சுற்றுகளில் திறன் இழப்பு இல்லாமல் மின்னொழுக்கை தேவையான அளவு குறைப்பதற்கு மின்தூண்டி(inductor) பயன்படுத்தப்படுகிறது.
  12. மின்மோட்டார், அசையும் சுருள் ஒலிபெருக்கி இவை மோட்டார் தத்துவத்தில் இயங்கும் கருவிகளாகும்.
  13. நிலைக்காந்தம், ஒலிச்சுருள், டயப்ரம் போன்றவை அசையும் சுருள் ஒலிபெருக்கியின் முக்கிய பகுதிகளாகும்.
  14. ஒரு மின்னியற்றியில் இயந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
  15. ஒரு மின்னியற்றியில் சுழலும் பகுதி ரோட்டரும் சுழலாத பகுதி ஸ்டேட்டரும் ஆகும்.
  16. திறன் மின்னியற்றிகளில் ஸ்டேட்டராக ஆர்மெச்சரை பயன்படுத்துகிறார்கள்.
  17. திறன் மின்னியற்றிகளில் ரோட்டராக நிலைக்காந்தத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
  18. நமது நாட்டில் மின்னோட்டம் உற்பத்தி செய்வது 11Kvயில் ஆகும்.
  19. மின்நிலையங்களுக்கு அருகே உள்ள துணைமின்நிலையங்களில் உயர் அழுத்த மின்மாற்றி பயன்படுத்தப்படுகிறது.
  20. வீட்டு மின்னிணைப்பில் கருவிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படுகின்றன.
  21. பேஸ் லைனில் மின் உருகு இழை (fuse) இணைக்கப்படுகிறது.
  22. வீட்டு மின்னிணைப்பு தொடங்கும் இடத்தில் வாட் மணி மீட்டர் இணைகக்ப்படுகிறது.
  23. சுவிட்சுகள் பேஸ் லைனில் இணைக்கப்படுகிறது.
  24. பயன்படுத்திய மின்னாற்றலின் அளவு வாட் மணி மீட்டர் பயன்படுத்தி கணக்காக்கப்படுகிறது.
  25. பொருட்களின் அதிர்வின் மூலம் ஒலி தோன்றுகிறது.
  26. பலமாக தட்டும்போது வீச்சு அதிகரிக்கும்.
  27. ஒலி ஒருவரில் உருவாக்கும் கேள்வி அனுபவத்தின் அளவு உரத்த சத்தம்.
  28. டெசிபெல் மீட்டர் பயன்படுத்தி ஒலியின் அளவை கண்டறியலாம்.
  29. ஒலி உற்பத்திப் பொருளின் அதிர்வும் வீச்சும் கேள்வித் திறனும் உரத்த சத்தத்தை நிர்ணயிக்கும்.
  30. ஒலி பரவும் ஊடகத்தின் அடர்த்தி அதிகரித்தால் உரத்த சத்தம் அதிகரிக்கும்.
  31. ஒலி பரவும் திசையில் காற்று வீசினால் உரத்த சத்தம் அதிகரிக்கும்.
  32. செவியில் உருவாகும் அதிர்வை சுருதி என்பர்.
  33. அதிர்வு(கூர்மை) அதிகம் கொண்ட ஒலி உயர்ந்த சுருதி கொண்டது.
  34. அதிர்வு(கூர்மை) குறைவான ஒலி தாழ்ந்த சுருதி கொண்டது.
  35. சில்வண்டின் ஒலி, பெண்களின் குரல், விசில் சத்தம் இவை உயர்ந்த சுருதி கொண்டவை.
  36. ஆண்களின் குரல், வாத்தின் ஒலி இவை தாழ்ந்த சுருதி கொண்டவை.
  37. தாழ்ந்த சுருதி கொண்ட ஒலி அலைகளின் கூட்டமே பேஸ் (Bass).
  38. உயர்ந்த சுருதி கொண்ட ஒலி அலைகளின் கூட்டமே ட்ரபிள் (Trble).
  39. மனிதனின் தொண்டையிலுள்ள குரல்நாண் அதிர்வு அடைவதால் ஒலி தோன்றுகிறது.
  40. அதிர்வெண்ணில் சிறிய வேறுபாடுகொண்ட இரண்டு பொருள்கள் அதிர்வு அடையும்போது அவற்றின் ஒலியில் தோன்றும் ஏற்ற இறக்கங்கள் பீட்ஸ் (beats)
  41. 20 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணிற்குக் குறைவான ஒலி இன்ப்ராசோணிக் ஒலி.
  42. 20000 ஹெர்ட்ஸிற்கு அதிகமான அதிர்வெண்கொண்ட ஒலி அல்ட்ராசோணிக் ஒலி.
  43. பலமுறை ஒலி மீளலின் பலனாக உருவாகும் முழக்கம் எதிர்முழக்கம் (reverberation).
  44. ஒலி வாயுவின் வழியாக 340 m/s வேகத்தில் பயணிக்கும்.
  45. முதலில் ஒலி கேட்ட பிறகு அதே ஒலி மீண்டும் கேட்பதை எதிரொலி (echo) என்கிறோம்.
  46. சாதாரண நிலையில் ஒருவருக்கு 20ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் கொண்ட ஒலியைக் கேட்க இயலும்.
  47. நாய்களுக்கும் வௌவால்களுக்கும் டால்பின்களுக்கும் அல்ட்ராசோணிக் (20000 ஹெர்ட்ஸிற்கு அதிகமான) ஒலியைக் கேட்க இயலும்.
  48. திமிங்கலங்களுக்கும் யானைகளுக்கும் இன்ப்ராசேணிக் (20 ஹெர்ட்ஸிற்குக் குறைவான) ஒலியைக் கேட்க இயலும்.
  49. கடலின் ஆழம் கண்டறிய சோணார் (sonar) பயன்படுத்தப்படுகிறது.
  50. ஒலியின் அலகு டெசிபெல் (db)
  1. திறன் மின்னியற்றிகளில் மண்டலக் காந்தமான மின்காந்தத்திற்குத் தேவையான DC யை வழங்கும் துணை மின்னியற்றிகளுக்கு எக்சைட்டர் என்று பெயர்.
  2. பார்வை ஒளி அதன் பகுதி நிறங்களாக பிரியும் செயல் ஒளிப்பிரிகை(நிறப்பிரிகை).
  3. ஒளிப்பிரிகையினால் தோன்றும் பகுதி நிறங்களின் வரிசைக்கிரமமே நிறமாலை.
  4. ஆகாய விமானத்திலிருந்து பார்க்கும்போது வானவில் வட்ட வடிவில் காணப்படும்.
  5. வானவில்லின் வெளிப்பகுதியில் சிவப்பு நிறம் காணப்படும்.
  6. வானவில்லின் உள்பகுதியில் ஊதா நிறம் காணப்படும்.
  7. காலையில் வானவில் மேற்கு திசையில் காணப்படும்.
  8. மாலையில் வானவில் கிழக்கு திசையில் காணப்படும்.
  9. ஒளியைக் கடத்திவிடும் பொருள்கள் ஒளி ஊடுருவும் பொருள்கள்.
  10. ஒரு நிறத்தையும் எதிரொளிக்காத பொருள் (வெளிவிடாத பொருள்) கறுப்பு நிறத்தில் காணப்படும்.
  11. ஒளி ஊடுருவாத பொருள்கள் அதன் நிறத்தை மட்டும் எதிரொளிக்கிறது.
  12. ஒளி ஊடுருவும் பொருள்களின் நிறம் அது கடத்திவிடும் நிறத்தைப் பொறுத்தது.
  13. ஒன்றிற்கதிகமான நிறங்களைக்கொண்ட ஒளி கூட்டு ஒளி.
  14. சிவப்பு பச்சை நீலம் இவை முதன்மை நிறங்கள்.
  15. பச்சையும் சிவப்பும் இணைந்தால் மஞ்சள்.
  16. பச்சையும் நீலமும் இணைந்தால் சியான்.
  17. நீலமும் சிவப்பும் இணைந்தால் மஜந்தா.
  18. சிவப்பு பச்சை நீலம் இணைந்தால் வெள்ளை.
  19. சிவப்பு பச்சை நீலம் இவை முதன்மை நிறங்களாகும்.
  20. சிவப்பு பச்சை நீலம் இவை இணைந்து கிடைக்கும் அனைத்து நிறங்களும் துணை நிறங்களாகும்.
  21. கூட்டு ஒளி கிடைக்க (வெள்ளை நிறம்) முதன்மை நிறத்துடன் சேர்க்கும் நிறத்திற்கு நிரப்புநிறம்.
  22. ஒளியின் ஒழுங்கற்றதும் பலமுறை திரும்பத் திரும்ப நடைபெறுவதுமான எதிரொளித்தல் ஒளிச்சிதறல்.
  23. சிவப்பிற்கு அலைநீளம் அதிகம்.
  24. ஊதாவிற்கு அலைநீளம் குறைவு.
  25. துகள்களின் அளவு அதிகரிப்பதைப் பொறுத்து ஒளிச்சிதறல் அதிகரிக்கிறது.
  26. துகள்களின் அளவு ஒளியின் அலைநீளத்தை விட அதிகமெனில் அனைத்து நிறங்களும் ஒரே அளவில் சிதறல் அடையும்.
  27. இன்ப்ரா ரெட் (அகச்சிவப்பு) சிவப்பை விட அலைநீளம் அதிகமான ஒளி.
  28. அல்ட்ரா வயலட் (புறஊதா) ஊதா நிறத்தை விட அலைநீளம் குறைந்த கதிர்கள்.
  29. இன்ப்ரா ரெட் (அகச்சிவப்பு) அல்ட்ரா வயலட் (புறஊதா) இவற்றை கண்ணால் காண இயலாது.
  30. குறைந்த அலைநீளங்களைக் (ஊதா கருநீலம் நீலம்) கொண்ட நிறங்கள் சிதறல் அடைந்து கிடைக்கும் நிறங்களின் தொகுப்பு நீலம். (வானம் நீலநிறமாகத் தோன்றும்).
  31. அதிக அலைநீளங்களைக் (சிவப்பு ஆரஞ்சு பச்சை) கொண்ட நிறங்கள் (காலையிலும் மாலையிலும்) சிதறல் அடைந்து கிடைக்கும் நிறங்களின் தொகுப்பு சிவப்பு. (வானம் சிவப்பு நிறமாகத் தோன்றும்).

No comments:

Post a Comment