5.9.12

ஞாலத்தின் சூரியன்கள்

 
-->
ஞானச் சுடரை
ஞாலத்திற் களித்திடும்
அறிவுச் சூரியன்கள்
ஆசிரியர்கள்!

தம் தொழிலுக்கு
மரியாதைக் கொடுத்து
பெருமை சேர்த்து நிற்கும்
சிற்பங்களின் சிற்பிகள்.


    இந்த சிற்பங்களை செதுக்கிய சிற்பிகளை நினைவுகூர தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுங்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்திய சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களை இத்தருணத்தில் நினைத்திடுவோம்.

    தனது வாழ்வில் ஆசிரியப்பணியை பெருமையாக கருதினார். பற்பல ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ஆசிரியர்களே எல்லா தடைகளையும் உடைத்து மாணவர்களின் ஆன்மாவிற்குள் நுழைந்து சமூக மாற்றத்தைத் தோற்றுவிப்பவர்கள் என்பதில் அளவுகடந்த நம்பிக்கை கொண்டவர்.

ஒரு ஆசிரியர்

1.மேம்பட்டவராய், மாணவர் நிலைக்கு இறங்கி வருபவராக
2.கற்பித்தலுடன் அதற்கு சம்பந்தமில்லாத நூற்றுக்கணக்கான செயல்களை மாணவர் நலனுக்கு செய்பவராக
3.முக்கியச் செய்திகளை அன்றாடம் பகிர்ந்துகொள்பவராக
4.மற்றவர் நமக்கு துணைநிற்காத நேரத்திலும் புன்னகையோடு தனது பணியை சிறப்புறச் செய்பவராய் இருத்தல் வேண்டும்.

    அனைத்து ஆசிரியர்களின் பணி சிறக்க ict4tamil -ன் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment